நற்றிணை - 12. பாலை
விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப் பாசம் தின்ற தேய் கால் மத்தம் நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும் வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால் அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் |
5 |
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள், 'இவை காண்தோறும் நோவர்மாதோ; அளியரோ அளியர் என் ஆயத்தோர்!' என நும்மொடு வரவு தான் அயரவும், தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே. |
10 |
முடை தீர விளம்பழம் இட்டுவைத்தலானே அதன் மணம் கமழ்கின்ற நிறைந்த தயிர்த்தாழியில; கயிறு ஆடித் தேய்த்தலாலே தேய்ந்த தண்டினையுடைய மத்திட்டு வெண்ணெய் தோன்றக் கடைதலால்; தறியடியில் ஓசை முழங்குகின்ற; தங்கிய இருள் தீரும் வைகறைப் பொழுதில்; தன்மெய் பிறர்க்குத் தோன்றாதபடி மறைத்துத் தன் காலிலணியும் பருக்கைக்கற் போகடப்பட்ட சிலம்பைக் கழற்றி; பல மாட்சிமைப்பட்ட வரிந்த புனைந்த பந்தோடு சேர ஓரிடத்தில் வைக்கச் செல்பவள்; என் தோழிமார் இவற்றைக் காணுந்தோறும் நோவாநிற்பர், அவர் இரங்கத் தக்காரல்லரோ என்று கருதி; நும்மோடு தான் வருதலை மேற்கொண்டொழுகா நிற்பவும்; அவள் கண்கள் தம் அளவுக்கும் அடங்காமல் அழா நின்றன; ஆதலின் நுமக்கு ஏற்றவாறு செய்ம்மின்;
தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது. - கயமனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 12. பாலை, இலக்கியங்கள், நற்றிணை, பாலை, தான், கால், சங்க, எட்டுத்தொகை, விளம்பழம்