நற்றிணை - 119. குறிஞ்சி

தினை உண் கேழல் இரிய, புனவன் சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர், ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன் ஆர் தர வந்தனன் ஆயினும், படப்பை இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும் |
5 |
பல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும் பெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு கூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும் முயங்கல் பெறுகுவன் அல்லன்; |
10 |
புலவி கொளீஇயர், தன் மலையினும் பெரிதே. |
தினைப்புனத்து வந்து மேயும் பன்றி பட்டொழியுமாறு அகத்தினைப்புனத்துக்குத் தலைவன் சிறிய இயந்திரமாக அமைத்து வைத்த பெரிய கல்லின் கீழால்; ஒள்ளிய நிறத்தையும் வலியையுமுடைய புலி புகுந்துபடுகின்ற மலைநாடன் யாராலே தரப்பட்டு வந்தவனாயினும்; கொல்லையின்கண் இனிய முசுவின் பெரியகலை நல்ல உணவை உண்ணாநிற்கும் பலவாய மலரையுடைய கான்யாற்றின் மேலுள்ள; கரையின்கண்ணே பெரிய கலை மான், கூட்டமாகிய மலையாட்டினத்துடனே தாவித் துள்ளிக் குதியாநிற்கும் பெரிய மூங்கிற்புதர் நிழலில்; அவன் குளவியுடனே கூவிளமலரிடையிட்டுக் கட்டிய நெருங்கிய மாலையுடைவனாகி வாராநிற்பன்; வந்தும் யாது பயன்? தலைவியின் முயக்கத்தை இனி எவ்வளவேனும் அடைபவனல்லன்; அது காரணமாகத் தன் மலையினுங்காட்டிற் பெரிதாகப் புலந்து கொள்ளினும் புலந்துகொள்வானாக!;
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது. - பெருங்குன்றூர்கிழார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 119. குறிஞ்சி, இலக்கியங்கள், குறிஞ்சி, பெரிய, நற்றிணை, புலி, சங்க, எட்டுத்தொகை, பெருங்