நற்றிணை - 115. முல்லை
மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர், அன்னையும் சிறிது தணிந்து உயிரினள்; 'இன் நீர்த் தடங் கடல் வாயில் உண்டு, சில் நீர்' என, மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி |
5 |
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ, கார் எதிர்ந்தன்றால், காலை; காதலர் தவச் சேய் நாட்டர்ஆயினும், மிகப் பேர் அன்பினர்- வாழி, தோழி!- நன் புகழ் உலப்பு இன்று பெறினும் தவிரலர்; |
10 |
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே? |
தோழீ! வாழி அகன்று விரிந்த பொய்கையின் கண்ணுள்ள மலர்களைக் கொய்து வந்த துவட்சியால் வருந்திய தோழியர் குழாமெல்லாம் தம் மெய்ந்நோவொழிந்து இனிதாக வுறங்கவேண்டி; அன்னையும் நம்மீதுகொண்ட சினம் சிறிது தணிந்து உயிர்ப்புடையளாயினாள்; அவள் அங்ஙனமாகிய பொழுது முகிலும் இனிய நீரையுடைய பெரிய கடலின் நீர் சில என்னும் படியாக வாயினாலுண்டு; மயிலின் அடிபோன்ற கரிய கதிராகிய பூந்துணரையுடைய நொச்சி வேலியின்மீது இல்லின் நடுமுற்றத்தில் முளைகொண்டெழுந்த முல்லை கூரை மேலாலே சென்று படர்ந்து அவ்விரண்டும் முறையே அரும்பவிழ்ந்து மலருமாறு இன்று நாட்காலை எதிர்போந்து கார்ப்பருவம் செய்யலாகியது கண்டாய், அஃது அங்ஙனமாக; இப்பொழுது நங்காதலர் மிக்க சேய்மையின் கண்ணதாகிய நாட்டில் உறைபவராயினும்; நம்பால் மிகப் பெரிய அன்புடையராதலின் அங்கே தாங்கொண்ட வினை முடித்தலால் அளவில்லாத புகழையடைவதாயினும் குறித்த பருவவரவின்கண் வாராது ஆண்டுறைபவரல்லர், அவர் வருமளவும் நீ வருந்தாதே கொள்!; இன்றுதான் பருவந் தொடங்குகின்ற தென்பதன் குறியாக அம்மேக முழங்கு மிடியோசையை யான் கேளாநின்றேனல்லனோ?
பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 115. முல்லை, முல்லை, இலக்கியங்கள், நற்றிணை, மிகப், வாழி, தோழி, இன்று, நொச்சி, பெரிய, தணிந்து, எட்டுத்தொகை, சங்க, அன்னையும், சிறிது, நீர்