குறுந்தொகை - 56. பாலை - தலைவன் கூற்று
(தலைவியையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டுமென்று விரும்பிய தோழிக்கு உடம்படானாகித் தனியே பிரிந்து சென்ற தலைமகன் பாலைநிலத்தின் தீமையைக் கண்டு, "இத்தகைய பொல்லாங்கையுடைய இடத்தில் தலைவி வருவாளாயின் மிக இரங்கத் தக்காள்!" என்று கூறியது.)
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகற் சின்னீர் வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர் வருகதில் அம்ம தானே அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே. |
5 |
- சிறைக்குடி ஆந்தையார். |
வேட்டையை மேற் கொண்ட செந்நாய் தோண்டி உண்டு எஞ்சியதாகிய காட்டுமல்லிகைப் பூ மூடிய அழுகல் நாற்றத்தையுடைய சிலவாகிய நீரை வளையையுடைய கையளாய் எம்மோடு சேர்ந்து உண்ணுதற்கு தலைவி வருக; வந்தால் எம் நெஞ்சின்கண் விரும்பிய பொருந்திய அத்தலைவி அளியளோ மிக இரங்கத் தக்காள்!
முடிபு: தான் என்மொடு நீரை உணீஇயர் வருகதில்லம்ம; எம் நெஞ்சமர்ந்தோள் அளியள்!
கருத்து: பொல்லாங்கையுடைய இவ்விடத்தில் தலைவி வருதற்குரியளல்லள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 56. பாலை - தலைவன் கூற்று, இலக்கியங்கள், தலைவி, பாலை, குறுந்தொகை, கூற்று, தலைவன், செந்நாய், நீரை, தக்காள், அளியளோ, விரும்பிய, எட்டுத்தொகை, சங்க, பொல்லாங்கையுடைய, இரங்கத்