குறுந்தொகை - 192. பாலை - தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “அவர் வருவர்; நீ வருந்தற்க”என்று தோழி கூறி ஆற்றுவிப்பத் தலைவி, “இளவேனிற் பருவத்தும்அவர் வாராமையின் தனித்திருக்கும் யான் எங்ஙனம் வருந்தாமல்இருப்பேன்;” என்று இரங்கிக் கூறியது.)
ஈங்கே வருவர் இனையல் அவர்என அழாஅற்கோ இனியே நோய்நொந் துறைவி மின்னின் றூவி இருங்குயில் பொன்னின் உரைதிகழ் கட்டளை கடுப்ப மாச்சினை நறுந்தாது கொழுதும் பொழுதும் |
5 |
வறுங்குரற் கூந்தல் தைவரு வேனே. | |
- கச்சிப்பேட்டு நன்னாகையார். |
நோயால் வருந்திஉறையும் தோழி! தலைவர் இவ்விடத்தேமீண்டு வருவார் வருந்தற்க என்று நீசொல்வதனால் இப்பொழுது நான்அழாமல் இருப்பேனோ? மின்னுகின்றஇனிய இறகுகளையுடைய கரிய குயில் தன் மேனிபொன்னினது உரைத்த பொடி விளங்குகின்ற உரைகல்லைஒக்கும்படி மாமரத்தின் கிளையினிடத்து நறிய பூந்தாதைக் கோதுகின்றஇளவேனிற் காலத்திலும் அவர் வாராமையால் புனையப் பெறாமலுள்ள வறியகொத்தாகிய கூந்தலைத் தடவுவேன்.
முடிபு: “நோய் நொந்துறைவி, இனையல்” என அழா அற்கோ?வறுங்குரற் கூந்தல் தைவருவேன்.
கருத்து: தலைவருடைய பிரிவைப் பொறுத்துக் கொண்டு யான்எங்ஙனம் வருந்தாமல் இருத்தல் இயலும்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 192. பாலை - தலைவி கூற்று, இலக்கியங்கள், தலைவி, பாலை, குறுந்தொகை, கூற்று, வறுங்குரற், தோழி, கூந்தல், சங்க, எட்டுத்தொகை, வருவர்