குறுந்தொகை - 124. பாலை - தோழி கூற்று
(தலைவியைப் பிரிந்து தனியே செல்ல விரும்பிய தலைவன், “பாலை நிலம் இவளை வருத்தற்கு உரியதன்று: இன்னாமையையுடையது” என்று கூற, “தலைவரைப் பிரிந்தாருக்கு வீடுமட்டும் இனிமையையுடையதோ?” என்று வினவு முகத்தால் தலைவியையும் உடன்கொண்டு செல்லும்படி தோழி அறிவித்தது.)
உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு இன்னா என்றி ராயின் இனியவோ பெரும தமியோர்க்கு மனையே. |
|
- பாலைபாடிய பெருங்கடுங்கோ. |
தலைவ உப்பு வாணிகர் பலர் கூடிக் கடந்து சென்ற பக்கத்தையும் விரிந்த இடத்தையும் பெற்ற குடியிருந்த ஊர் பாழாகப் போனதைப் போன்ற தோற்றத்தையுடைய ஓமை மரங்கள் வளர்ந்த பெரிய பாலை நிலங்கள் இன்னாமையையுடையன என்று கூறித்தனியே செல்லக் கருதினீராயின் தலைவரைப் பிரிந்த தனிமையையுடைய மகளிருக்கு வீடுகள் இனிமை தருவனவோ? அல்ல.
முடிபு: பெரும, காடு இன்னா என்றிராயின், தமியோர்க்கு மனை இனியவோ?
கருத்து: தலைவியையும் உடன்கொண்டு செல்லுதல் வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறுந்தொகை - 124. பாலை - தோழி கூற்று, பாலை, இலக்கியங்கள், தோழி, கூற்று, குறுந்தொகை, இனியவோ, பெரும, தமியோர்க்கு, இன்னா, தலைவியையும், எட்டுத்தொகை, சங்க, உடன்கொண்டு