கலித்தொகை - கலித்தொகை - குறிஞ்சிக் கலி 62
ஏஎ இஃது ஒத்தன், நாண் இலன் தன்னொடு மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் 'மேவினும், மேவாக்கடையும், அஃது எல்லாம் நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்! நின்னை யான் | 5 |
புல் இனிது ஆகலின், புல்லினென்' எல்லா! தமக்கு இனிது என்று, வலிதின் பிறர்க்கு இன்னா செய்வது நன்று ஆமோ மற்று?' சுடர்த் தொடீ! போற்றாய் களை, நின் முதுக்குறைமை; போற்றிக் கேள்! வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது, நீர்க்கு இனிது என்று | 10 |
உண்பவோ, நீர் உண்பவர்? செய்வது அறிகல்லேன்; யாது செய்வேன்கொலோ ஐ வாய் அரவின் இடைப்பட்டு, நை வாரா? 'மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை வௌவிக் கொளலும் அறன்' எனக் கண்டன்று; | 15 |
'அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி, கூறும் சொல் கேளான், நலிதரும்; பண்டு நாம் வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு மாறு உண்டோ , நெஞ்சே! நமக்கு. |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - குறிஞ்சிக் கலி 62, இனிது, இலக்கியங்கள், கலித்தொகை, கலித்தொகை, குறிஞ்சிக், செய்வது, அறிகல்லேன், சங்க, எட்டுத்தொகை, அஃது