கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 18
அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்ப, பிரிந்து உறை சூழாதி ஐய! விரும்பி நீ, என் தோள் எழுதிய தொய்யிலும், யாழ நின் மைந்துடை மார்பில் சுணங்கும், நினைத்துக் காண்: சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது; | 5 |
ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார்; இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார் வளமை விழைதக்கது உண்டோ ? உள நாள், ஒரோஒ கை தம்முள் தழீஇ, ஒரோஒ கை ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரேஆயினும், | 10 |
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை; அரிதுஅரோ, சென்ற இளமை தரற்கு! |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கலித்தொகை - கலித்தொகை - பாலைக் கலி - 18, இலக்கியங்கள், கலித்தொகை, கலித்தொகை, பாலைக், ஒரோஒ, எட்டுத்தொகை, சங்க