அகநானூறு - 80. நெய்தல்
கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும் இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின் வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப! நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த |
5 |
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும். முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின் செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப, இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ, |
10 |
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் தண் நறும் பைந் தாது உறைக்கும் புன்னைஅம் கானல், பகல் வந்தீமே. |
இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 80. நெய்தல் , இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, எட்டுத்தொகை, சங்க