அகநானூறு - 7. பாலை
'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின; தலை முடிசான்ற; தண் தழை உடையை; அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்; மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய; காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; |
5 |
பேதை அல்லை மேதைஅம் குறுமகள்! பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என, ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி, தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி! |
10 |
வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர் தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள் இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை, அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென, பிற்படு பூசலின் வழிவழி ஓடி, |
15 |
மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை, நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி, ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல், ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த |
20 |
துய்த் தலை வெண் காழ் பெறூஉம் கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே. |
மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று, நவ்விப்பிணாக்கண்டு, சொல்லியது. - கயமனார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 7. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க