அகநானூறு - 65 . பாலை
உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் |
5 |
பாடிச் சென்ற பரிசிலர் போல உவ இனி வாழி, தோழி! அவரே, பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச் செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும் மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி, |
10 |
மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர் வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு, மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை உயவல் யானை வெரிநுச் சென்றன்ன கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி, |
15 |
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; 'பணைத் தோள், நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை, நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு அரியவால்' என அழுங்கிய செலவே! |
20 |
வேறுப்பட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது. - மாமூலனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 65 . பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, தோழி, எட்டுத்தொகை, சங்க