அகநானூறு - 54. முல்லை
விருந்தின் மன்னர் அருங்கலம் தெறுப்ப, வேந்தனும் வெம்பகை தணிந்தனன். தீம் பெயற் காரும் ஆர்கலி தலையின்று. தேரும் ஓவத்தன்ன கோபச் செந் நிலம், வள் வாய் ஆழி உள் உறுபு உருள, |
5 |
கடவுக. காண்குவம் பாக! மதவு நடைத் தாம்பு அசை குழவி வீங்குசுரை மடிய, கனைஅல்அம் குரல காற் பரி பயிற்றி, படு மணி மிடற்ற பய நிரை ஆயம் கொடு மடி உடையர் கோற் கைக் கோவலர் |
10 |
கொன்றைஅம் குழலர் பின்றைத் தூங்க, மனைமனைப் படரும் நனை நகு மாலை, தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப் புன் காழ் நெல்லிப்பைங் காய் தின்றவர் |
15 |
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி, 'முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள்! பொன்னுடைத் தாலி என் மகன் ஒற்றி, வருகுவைஆயின், தருகுவென் பால்' என, விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி, |
20 |
திதலை அல்குல் எம் காதலி புதல்வற் பொய்க்கும் பூங்கொடி நிலையே. |
வினை முடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.- மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 54. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, பயிற்றி, எட்டுத்தொகை, சங்க