அகநானூறு - 50. நெய்தல்
கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி, நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்; வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்; மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப, பகலும் நம்வயின் அகலானாகிப் |
5 |
பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன், இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி, 'வாராதோர் நமக்கு யாஅர்?' என்னாது, மல்லல் மூதூர் மறையினை சென்று, சொல்லின் எவனோ பாண! 'எல்லி |
10 |
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்' என, கண் நிறை நீர் கொடு கரக்கும், ஒண் நுதல் அரிவை, 'யான் என்செய்கோ?' எனவே. |
தோழி பாணனுக்குச் சொல்லியது. - கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 50. நெய்தல் , இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, நீர், எட்டுத்தொகை, சங்க