அகநானூறு - 43. பாலை
கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி, என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய, நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி, |
5 |
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய், தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே கொய் அகை முல்லை காலொடு மயங்கி, மை இருங் கானம் நாறும் நறு நுதல், |
10 |
பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும் அளியரோ அளியர்தாமே அளி இன்று ஏதில் பொருட்பிணிப் போகி, தம் இன் துணைப் பிரியும் மடமையோரே! |
15 |
தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரையாசிரியர் நல்லந்துவனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 43. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, இருங், எட்டுத்தொகை, சங்க