அகநானூறு - 394. முல்லை
களவும் புளித்தன; விளவும் பழுநின; சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர், இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு, கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு |
5 |
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக, இளையர் அருந்த, பின்றை, நீயும் இடு முள் வேலி முடக் கால் பந்தர், புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில், புனை இருங் கதுப்பின் நின் மனையோள் அயர, |
10 |
பாலுடை அடிசில் தொடீஇய, ஒரு நாள், மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும் மடி விடு வீளை வெரீஇ, குறு முயல் மன்ற இரும் புதல் ஒளிக்கும் |
15 |
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே. |
இரவுக்குறித் தலைமகளை இடத்து உய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு கடாயது. - நன்பலூர்ச் சிறுமேதாவியார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 394. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, சிறு, எட்டுத்தொகை, சங்க