அகநானூறு - 392. குறிஞ்சி
தாழ் பெருந் தடக் கை தலைஇய, கானத்து, வீழ் பிடி கெடுத்த, வெண் கோட்டு யானை உண் குளகு மறுத்த உயக்கத்தன்ன, பண்புடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇ, பின்னிலை முனியானாகி, 'நன்றும், |
5 |
தாது செய் பாவை அன்ன தையல், மாதர் மெல் இயல், மட நல்லோள்வயின் தீது இன்றாக, நீ புணை புகுக!' என என்னும் தண்டும்ஆயின், மற்று அவன் அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே |
10 |
ஒல் இனி, வாழி, தோழி! கல்லெனக் கண மழை பொழிந்த கான் படி இரவில், தினை மேய் யானை இனன் இரிந்து ஓட, கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த வல் வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென, |
15 |
மறப் புலி உரற, வாரணம் கதற, நனவுறு கட்சியின் நல் மயில் ஆல, மலை உடன் வெரூஉம் மாக் கல் வெற்பன் பிரியுநன் ஆகலோ அரிதே; அதாஅன்று, உரிதுஅல் பண்பின் பிரியுனன்ஆயின், |
20 |
வினை தவப் பெயர்ந்த வென் வேல் வேந்தன் முனைகொல் தானையொடு முன் வந்து இறுப்ப, தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை ஆற்றாமையின், பிடித்த வேல் வலித் தோற்றம் பிழையாத் தொல் புகழ் பெற்ற, |
25 |
விழை தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின் கான் அமர் நன்னன் போல, யான் ஆகுவல், நின் நலம் தருவேனே. |
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - மோசிகீரனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 392. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, வேல், குறை, கான், யானை, எட்டுத்தொகை, சங்க, தோழி