அகநானூறு - 386. மருதம்
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து வாளை நாள் இரை தேரும் ஊர! நாணினென், பெரும! யானே பாணன் மல் அடு மார்பின் வலி உற வருந்தி, எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் |
5 |
நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி, நல் போர்க் கணையன் நாணியாங்கு மறையினள் மெல்ல வந்து, நல்ல கூறி, 'மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின் |
10 |
சேரியேனே; அயல் இலாட்டியேன்; நுங்கை ஆகுவென் நினக்கு' என, தன் கைத் தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர, நுதலும் கூந்தலும் நீவி, பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே. |
15 |
தோழி வாயில் மறுத்தது; தலைமகள் தகுதி சொல்லியதூஉம் ஆம். - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 386. மருதம் , இலக்கியங்கள், மருதம், அகநானூறு, வந்து, எட்டுத்தொகை, சங்க