அகநானூறு - 382. குறிஞ்சி
'பிறர் உறு விழுமம் பிறரும் நோப; தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்; கடம்பு கொடி யாத்து, கண்ணி சூட்டி, வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் காடு கெழு நெடு வேட் பாடு கொளைக்கு ஏற்ப, |
5 |
அணங்கு அயர் வியன் களம் பொலிய, பையத் தூங்குதல் புரிந்தனர், நமர்' என, ஆங்கு அவற்கு அறியக் கூறல் வேண்டும் தோழி! அருவி பாய்ந்த கரு விரல் மந்தி செழுங் கோட் பலவின் பழம் புணையாக, |
10 |
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும் வறன் உறல் அறியாச் சோலை, விறல் மலை நாடன் சொல் நயந்தோயே! |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது. - கபிலர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 382. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, தோழி, விழுமம், சங்க, எட்டுத்தொகை