அகநானூறு - 378. குறிஞ்சி
'நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின், வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள, வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை நன் பொன் அன்ன நறுந் தாது உதிர, காமர் பீலி ஆய் மயில் தோகை |
5 |
வேறு வேறு இனத்த வரை வாழ் வருடைக் கோடு முற்று இளந் தகர்ப் பாடு விறந்து, அயல ஆடு கள வயிரின் இனிய ஆலி, பசும் புற மென் சீர் ஒசிய, விசும்பு உகந்து, இருங் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் |
10 |
பெருங் கல் நாடன் பிரிந்த புலம்பும், உடன்ற அன்னை அமரா நோக்கமும், வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச் சுடர் கெழு மண்டிலம் அழுங்க, ஞாயிறு குட கடல் சேரும் படர் கூர் மாலையும், |
15 |
அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, யாங்ஙனம் வாழ்தி?' என்றி தோழி! நீங்கா வஞ்சினம் செய்து; நத் துறந்தோர் உள்ளார்ஆயினும், உளெனே அவர் நாட்டு அள் இலைப் பலவின் கனி கவர் கைய |
20 |
கல்லா மந்தி கடுவனோடு உகளும் கடுந் திறல் அணங்கின் நெடும் பெருங் குன்றத்து, பாடு இன் அருவி சூடி, வான் தோய் சிமையம் தோன்றலானே. |
இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியது. -காவட்டனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 378. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, பெருங், தோழி, பாடு, வேறு, எட்டுத்தொகை, சங்க