அகநானூறு - 374. முல்லை
மாக் கடல் முகந்து, மாதிரத்து இருளி, மலர் தலை உலகம் புதைய, வலன் ஏர்பு, பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ, போழ்ந்த போலப் பல உடன் மின்னி, தாழ்ந்த போல நனி அணி வந்து, |
5 |
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி, இடியும் முழக்கும் இன்றி, பாணர் வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன இன் குரல் அழி துளி தலைஇ, நல் பல பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை, |
10 |
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில், குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி, மணி மண்டு பவளம் போல, காயா அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய, கார் கவின் கொண்ட காமர் காலை, |
15 |
செல்க, தேரே நல் வலம் பெறுந! பெருந் தோள், நுணுகிய நுசுப்பின், திருந்துஇழை, அரிவை விருந்து எதிர்கொளவே! |
பாசறை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக்காடனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 374. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, கொண்ட, எட்டுத்தொகை, சங்க