அகநானூறு - 367. பாலை
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து, பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து, அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப, மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய, முனை உழை இருந்த அம் குடிச் சீறூர், |
5 |
கருங் கால் வேங்கைச் செஞ் சுவல் வரகின் மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை, குவி அடி வெருகின் பைங் கண் ஏற்றை ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர், தளிர் புரை கொடிற்றின், செறி மயிர் எருத்தின், |
10 |
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும் புல்லென் மாலையும், இனிது மன்றம்ம நல் அக வன முலை அடையப் புல்லுதொறும் உயிர் குழைப்பன்ன சாயல், |
15 |
செயிர் தீர், இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 367. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க