அகநானூறு - 365. பாலை
அகல் வாய் வானம் மால் இருள் பரப்ப, பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு சினவல் போகிய புன்கண் மாலை, அத்த நடுகல் ஆள் என உதைத்த கான யானைக் கதுவாய் வள் உகிர், |
5 |
இரும் பனை இதக்கையின், ஒடியும் ஆங்கண், கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை, வருநர் இன்மையின் களையுநர்க் காணா என்றூழ் வெஞ் சுரம் தந்த நீயே துயர் செய்து ஆற்றாயாகி, பெயர்பு, ஆங்கு |
10 |
உள்ளினை வாழிய, நெஞ்சே! வென் வேல் மா வண் கழுவுள் காமூர் ஆங்கண், பூதம் தந்த பொரி அரை வேங்கைத் தண் கமழ் புது மலர் நாறும் அம் சில் ஓதி ஆய் மடத் தகையே. |
15 |
தலைமகன் இடைச் சுரத்து நின்று சொல்லியது.-மதுரை மருதன் இளநாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 365. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, தந்த, ஆங்கண், சங்க, எட்டுத்தொகை