அகநானூறு - 36. மருதம்
| பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக் கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி, ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக் கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து, அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
5 |
| தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது, கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு, நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர! வரு புனல் வையை வார் மணல் அகன் துறை, திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில், |
10 |
| நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு வதுவை அயர்ந்தனை என்ப. அலரே, கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப, சேரல், செம்பியன், சினம் கெழு திதியன், |
15 |
| போர் வல் யானைப் பொலம் பூண் எழினி, நார் அரி நறவின் எருமையூரன், தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல் |
20 |
| முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல, கொன்று, களம்வேட்ட ஞான்றை, வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே! |
தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. - மதுரை நக்கீரர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 36. மருதம் , இலக்கியங்கள், மருதம், அகநானூறு, அகன், எட்டுத்தொகை, சங்க