அகநானூறு - 359. பாலை
'பனி வார் உண்கணும், பசந்த தோளும், நனி பிறர் அறியச் சாஅய், நாளும், கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார், நீடினர்மன்னோ, காதலர்' என நீ எவன் கையற்றனை? இகுளை! அவரே |
5 |
வானவரம்பன் வெளியத்து அன்ன நம் மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது, அருஞ் சுரக் கவலை அசைஇய கோடியர், பெருங் கல் மீமிசை, இயம் எழுந்தாங்கு, வீழ் பிடி கெடுத்த நெடுந் தாள் யானை |
10 |
சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும், பொய்யா நல் இசை மா வண் புல்லி, கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைந் தாள் முதைத் சுவல் மூழ்கிய, கான் சுடு குரூஉப் புகை அருவித் துவலையொடு மயங்கும் |
15 |
பெரு வரை அத்தம் இயங்கியோரே! |
பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.-மாமூலனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 359. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, தாள், எட்டுத்தொகை, சங்க