அகநானூறு - 354. முல்லை
மத வலி யானை மறலிய பாசறை, இடி உமிழ் முரசம் பொரு களத்து இயம்ப, வென்று கொடி எடுத்தனன், வேந்தனும்; கன்றொடு கறவைப் புல்லினம் புறவுதொறு உகள, குழல் வாய் வைத்தனர் கோவலர், வல் விரைந்து, |
5 |
இளையர் ஏகுவனர் பரிய, விரி உளைக் கடு நடைப் புரவி வழிவாய் ஓட, வலவன் வள்பு வலி உறுப்ப, புலவர் புகழ் குறி கொண்ட பொலந்தார் அகலத்து, தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய, |
10 |
வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின், யாண்டு உறைவதுகொல் தானே மாண்ட போது உறழ் கொண்ட உண்கண் தீதிலாட்டி திரு நுதற் பசப்பே? |
வினை முற்றிய தலைமகற்கு உழையார் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் கடுவன் மள்ளனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 354. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, கொண்ட, எட்டுத்தொகை, சங்க