அகநானூறு - 338. குறிஞ்சி
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் மறம் கெழு தானை அரசருள்ளும், அறம் கடைப்பிடித்த செங்கோலுடன், அமர் மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள், பலர் புகழ் திருவின், பசும் பூட் பாண்டியன் |
5 |
அணங்குடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன், சினை ஒள் காந்தள் நாறும் நறு நுதல், துணை ஈர் ஓதி மாஅயோள்வயின், நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற முயங்கல் இயையாதுஆயினும், என்றும், |
10 |
வயவு உறு நெஞ்சத்து உயவுத் துணையாக, ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும் துன் அருந் துப்பின் வென் வேற் பொறையன் அகல் இருங் கானத்துக் கொல்லி போல, தவாஅலியரோ, நட்பே! அவள்வயின் |
15 |
அறாஅலியரோ, தூதே பொறாஅர் விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள், புனிற்று ஆன் தரவின், இளையர் பெருமகன், தொகு போர்ச் சோழன், பொருள் மலி பாக்கத்து, வழங்கல் ஆனாப் பெருந் துறை |
20 |
முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே! |
அல்லகுறிப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக் கணக்காயனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 338. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, உயர், மறம், சங்க, எட்டுத்தொகை