அகநானூறு - 284. முல்லை
சிறியிலை நெல்லிக் காய் கண்டன்ன குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல் முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு, குடந்தை அம் செவிய கோட் பவர் ஒடுங்கி, இன் துயில் எழுந்து, துணையொடு போகி, |
5 |
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் புன் புலம் தழீஇய பொறைமுதல் சிறு குடி, தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர், விசைத்த வில்லர், வேட்டம் போகி, முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும் |
10 |
காமர் புறவினதுவே காமம் நம்மினும் தான் தலைமயங்கிய அம் மா அரிவை உறைவு இன் ஊரே. |
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது; தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - இடைக்காடனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 284. முல்லை , இலக்கியங்கள், அகநானூறு, முல்லை, சிறு, போகி, சங்க, எட்டுத்தொகை, குறு