அகநானூறு - 282. குறிஞ்சி
பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய, செறி மடை அம்பின், வல் வில், கானவன் பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு, நீர் திகழ் சிலம்பின் நன் பொன் அகழ்வோன், கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப, |
5 |
வைந் நுதி வால மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு, மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு, சாந்தம் பொறைமரம் ஆக, நறை நார் வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு |
10 |
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து எந்தையும் எதிர்ந்தனன், கொடையே; அலர் வாய் அம்பல் ஊரும் அவனொடு மொழியும்; சாய் இறைத் திரண்ட தோள் பாராட்டி, யாயும், 'அவனே' என்னும்; யாமும், |
15 |
'வல்லே வருக, வரைந்த நாள்!' என, நல் இறை மெல் விரல் கூப்பி, இல் உறை கடவுட்கு ஆக்குதும், பலியே! |
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - தொல் கபிலன்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 282. குறிஞ்சி , இலக்கியங்கள், அகநானூறு, குறிஞ்சி, நீர், தலைமகன், கொண்டு, சிலம்பின், எட்டுத்தொகை, சங்க, பொருது