அகநானூறு - 257. பாலை
வேனிற் பாதிரிக் கூனி மா மலர் நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம், அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப, எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின் பொம்மல் ஓதி பொதுள வாரி, |
5 |
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச் சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின் தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும் வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள நுண் கோல் எல் வளை தௌர்க்கும் முன்கை |
10 |
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி, வல்லுவைமன்னால் நடையே கள்வர் பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார், மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து, நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து, |
15 |
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல் கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும், துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ, வெள் அரா மிளிர வாங்கும் |
20 |
பிள்ளை எண்கின் மலைவயினானே. |
உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 257. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, நின், எட்டுத்தொகை, சங்க