அகநானூறு - 154. முல்லை
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் நெடு நீர் அவல பகுவாய்த் தேரை சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க, குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப, |
5 |
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ, திரி மருப்பு இரலை தௌ அறல் பருகிக் காமர் துணையொடு ஏமுற வதிய, காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி; |
10 |
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித் தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு நம் வயிற் புரிந்த கொள்கை அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே. |
15 |
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 154. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, நெடு, எட்டுத்தொகை, சங்க