அகநானூறு - 228. குறிஞ்சி
பிரசப் பல் கிளை ஆர்ப்ப, கல்லென வரை இழி அருவி ஆரம் தீண்டித் தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில், கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக் கல் முகை நெடுஞ் சுனை நம்மொடு ஆடி, |
5 |
பகலே இனிது உடன் கழிப்பி, இரவே செல்வர்ஆயினும், நன்றுமன் தில்ல வான்கண் விரிந்த பகல் மருள் நிலவின் சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று, ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீப் |
10 |
புலிப் பொறி கடுப்பத் தோன்றலின், கய வாய் இரும் பிடி இரியும் சோலைப் பெருங் கல் யாணர்த் தம் சிறுகுடியானே. |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லி யது. - அண்டர் மகன் குறுவழுதியார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 228. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க