அகநானூறு - 217. பாலை
'பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை, எஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன, துவலை தூவல் கழிய, அகல் வயல் நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக் கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர, |
5 |
பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய தோல் எறி பாண்டிலின் வாலிய மலர, கோழிலை அவரைக் கொழு முகை அவிழ, ஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட, |
10 |
புலம்தொறும் குருகினம் நரல, கல்லென அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க, அற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என, எப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச் செப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே; |
15 |
நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த பாழ் படு மேனி நோக்கி, நோய் பொர, இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு, எயிறு தீப் பிறப்பத் திருகி, நடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே. |
20 |
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 217. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க