அகநானூறு - 213. பாலை
வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர் இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர், கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி, |
5 |
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும் வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து, நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது, |
10 |
அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப் பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப் பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து, எரி மருள் கதிர திரு மணி இமைக்கும் வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை |
15 |
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள் பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர் அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும், சென்று, தாம் நீடலோஇலரே என்றும் கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கை, |
20 |
வலம் படு வென்றி வாய் வாள், சோழர் இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த அறல் என நெறிந்த கூந்தல், உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - தாயங்கண்ணனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 213. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, கவின், பெரு, சங்க, எட்டுத்தொகை