அகநானூறு - 197. பாலை
மா மலர் வண்ணம் இழந்த கண்ணும், பூ நெகிழ் அணையின் சாஅய தோளும், நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த தொல் நலம் இழந்த துயரமொடு, என்னதூஉம் இனையல் வாழி, தோழி! முனை எழ |
5 |
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின், மறம் மிகு தானை, கண்ணன் எழினி தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும், நீடலர் யாழ, நின் நிரை வளை நெகிழ தோள் தாழ்பு இருளிய குவை இருங் கூந்தல் |
10 |
மடவோள் தழீஇய விறலோன் மார்பில் புன் தலைப் புதல்வன் ஊர்பு இழிந்தாங்கு, கடுஞ்சூல் மடப் பிடி தழீஇய வெண் கோட்டு இனம்சால் வேழம், கன்று ஊர்பு இழிதர, பள்ளி கொள்ளும் பனிச் சுரம் நீந்தி, |
15 |
ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம் வினை வலியுறூஉம் நெஞ்சமொடு இனையர் ஆகி, நப் பிரிந்திசினோரே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -மாமூலனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 197. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, தழீஇய, ஊர்பு, மிகு, இழந்த, எட்டுத்தொகை, சங்க, தோழி