அகநானூறு - 195. பாலை
'அருஞ் சுரம் இறந்த என் பெருந் தோட் குறுமகள் திருந்துவேல் விடலையொடு வரும்' என, தாயே, புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி, மனை மணல் அடுத்து, மாலை நாற்றி, உவந்து, இனிது அயரும் என்ப; யானும், |
5 |
மான் பிணை நோக்கின் மட நல்லாளை ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும், இன் நகை முறுவல் ஏழையைப் பல் நாள், கூந்தல் வாரி, நுசுப்பு இவர்ந்து, ஓம்பிய நலம் புனை உதவியும் உடையன்மன்னே; |
10 |
அஃது அறிகிற்பினோ நன்றுமன் தில்ல; அறுவை தோயும் ஒரு பெருங் குடுமி, சிறு பை நாற்றிய பல் தலைக் கொடுங் கோல், ஆகுவது அறியும் முதுவாய், வேல! கூறுகமாதோ, நின் கழங்கின் திட்பம்; |
15 |
மாறா வருபனி கலுழும் கங்குலில், ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர், எம் மனை முந்துறத் தருமோ? தன் மனை உய்க்குமோ? யாது அவன் குறிப்பே? |
மகட் போக்கிய நற்றாய் சொல்லியது. - கயமனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 195. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, இனிது, புனை, சங்க, எட்டுத்தொகை