அகநானூறு - 179. பாலை
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், வெண்தேர் ஓடும் கடம் காய் மருங்கில், துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டு, சிறு கண் யானை நெடுங் கை நீட்டி வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது, |
5 |
கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின் விடு வாய்ச் செங் கணைக் கொடு வில் ஆடவர் நல் நிலை பொறித்த கல் நிலை அதர, அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச் சுரம் செல விரும்பினிர்ஆயின் இன் நகை, |
10 |
முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய், குவளை நாள் மலர் புரையும் உண்கண், இம் மதி ஏர் வாள் நுதல் புலம்ப, பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ, நுமக்கே? |
பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -கோடி மங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 179. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, நிலை, வாய், சங்க, எட்டுத்தொகை