அகநானூறு - 173. பாலை
'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும் வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச் செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறு நுதல் மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல் |
5 |
சில் நாள் தாங்கல்வேண்டும்' என்று, நின் நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின், வருவர் வாழி, தோழி! பல புரி வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ, பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ, |
10 |
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட, காடு கவின் அழிய உரைஇ, கோடை நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க் கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம் கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம் |
15 |
இன் களி நறவின் இயல் தேர் நன்னன் விண் பொரு நெடு வரைக் கவாஅன் பொன் படு மருங்கின் மலை இறந்தோரே. |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -முள்ளியூர்ப் பூதியார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 173. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, நெடு, தோழி, சங்க, எட்டுத்தொகை