அகநானூறு - 164. முல்லை
கதிர் கையாக வாங்கி, ஞாயிறு பைது அறத் தெறுதலின், பயம் கரந்து மாறி, விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம் காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்; பொறி வரி இன வண்டு ஆர்ப்ப, பல உடன் |
5 |
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற. வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம். 'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி, இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு, ஆங்கு இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம் |
10 |
இது நற் காலம்; கண்டிசின் பகைவர் மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின், கந்து கால் ஒசிக்கும் யானை, வெஞ் சின வேந்தன் வினை விடப்பெறினே! |
பாசறைக்கண் இருந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 164. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க