அகநானூறு - 141. பாலை
அம்ம வாழி, தோழி! கைம்மிகக் கனவும் கங்குல்தோறு இனிய; நனவும் புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின; நெஞ்சும் நனிபுகன்று உறையும்; எஞ்சாது உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி, |
5 |
மழை கால்நீங்கிய மாக விசும்பில் குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து, அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்; மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி, பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய |
10 |
விழவு உடன் அயர, வருகதில் அம்ம! துவரப் புலர்ந்து தூ மலர் கஞலி, தகரம் நாறும் தண் நறுங் கதுப்பின் புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇ, |
15 |
கூழைக் கூந்தற் குறுந் தொடி மகளிர் பெருஞ் செய் நெல்லின் வாங்குகதிர் முறித்து, பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக் கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது; |
20 |
நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும் செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன நல் இசை வெறுக்கை தருமார், பல் பொறிப் புலிக் கேழ் உற்ற பூவிடைப் பெருஞ் சினை |
|
நரந்த நறும் பூ நாள் மலர் உதிர, கலை பாய்ந்து உகளும், கல் சேர் வேங்கை, தேம் கமழ் நெடு வரைப் பிறங்கிய வேங்கட வைப்பிற் சுரன் இறந்தோரே. |
'பிரிவிடை ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 141. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, மலர், பெருஞ், நாள், அம்ம, எட்டுத்தொகை, சங்க