அகநானூறு - 12. குறிஞ்சி
யாயே, கண்ணினும் கடுங் காதலளே; எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி சிவப்ப, எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்; யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின், இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே; |
5 |
ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும், கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை, விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார், குறவர் ஊன்றிய குரம்பை புதைய, வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் |
10 |
புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம், மழை படு சிலம்பில் கழைபட, பெயரும் நல் வரை நாட! நீ வரின், மெல்லியல் ஓரும் தான் வாழலளே. |
பகற்குறி வாராநின்ற தலைமகன் தோழியால் செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரவுக் குறி வாரா வரைவல்' என்றாற்கு, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. - கபிலர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 12. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க