அகநானூறு - 114. முல்லை
'கேளாய், எல்ல! தோழி! வேலன் |
5 |
சிறு புன் மாலையும் உள்ளார் அவர்' என, நப் புலந்து உறையும் எவ்வம் நீங்க, நூல் அறி வலவ! கடவுமதி, உவக்காண் நெடுங் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை, யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் |
10 |
வானக மீனின் விளங்கித் தோன்றும், அருங் கடிக் காப்பின், அஞ்சு வரு, மூதூர்த் திருநகர் அடங்கிய மாசு இல் கற்பின், அரி மதர் மழைக் கண், அமை புரை பணைத் தோள், அணங்கு சால், அரிவையைக் காண்குவம் |
15 |
பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே. |
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - .......
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 114. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, சிறு, எட்டுத்தொகை, சங்க