அகநானூறு - 10.நெய்தல்
வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய, மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த, முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை, புள் இறைகூரும் மெல்லம் புலம்ப! நெய்தல் உண்கண் பைதல கலுழ, |
5 |
பிரிதல் எண்ணினைஆயின், நன்றும் அரிது உற்றனையால் பெரும! உரிதினின் கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் கொண்டலொடு குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப் பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர் |
10 |
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி, மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும் வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே. |
இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது. - அம்மூவனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 10.நெய்தல் , இலக்கியங்கள், நெய்தல், அகநானூறு, எட்டுத்தொகை, சங்க