ஐங்குறுநூறு - 48. பாணன் பத்து
கருவி வானம் கார்சிறந்த் ஆர்ப்ப பருவம் செய்தன பைங்கொடி முல்லை பல்லான் கோவலர் படலைக் கூட்டும் அன்புஇல் மாலையும் உடைத்தோ வன்புறை பாண அவர்சென்ற நாடே. | 476 |
பனிமலர் நெடுங்கண் பசலை பாயத் துனிமலர் துயரமொடு அரும்படர் உழப்போள் கையறு நெஞ்சிற்கு உயவுத்துணை யாகச் சிறுவரைத் தங்குவை யாயின் காண்குவை மன்ஆல் பாணஎம் தேரே. | 477 |
நீடினம் என்று கொடுமை தூற்றி வாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந்து யாம்வெம் காதலி நோய்மிகச் சாஅய்ச் சொல்லியது உரைமதி நீயே முல்லை நல்யாழ்ப் பாணமற்று எமக்கே. | 478 |
சொல்லுமதி மாண சொல்லுதோறு இனிய நாடிடை விலங்கிய எம்வயின் நாள்தொறும் அரும்பனி கலந்த அருளில் வாடை தனிமை எள்ளும் பொழுதில் பனிமலர்க் கண்ணி கூறியது எமக்கே. | 479 |
நினக்குயாம் பாணரும் அல்லேம் எமக்கு நீயும் குருசிலை யல்லை மாதோ நின்வெம் காதலி தனிமனைப் புலம்பி ஈரிதழ் உண்கண் உகுத்த பூசல் கேட்டு மருளா தோயே. | 480 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 48. பாணன் பத்து, இலக்கியங்கள், பாணன், ஐங்குறுநூறு, பத்து, காதலி, எமக்கே, சங்க, எட்டுத்தொகை, முல்லை