ஐங்குறுநூறு - 30. மஞ்ஞைப் பத்து.
கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல் அடுக்கல் மஞ்ஞை கவரு நாட நடுநாள் கங்குலும் வருதி கடுமா தாக்கின் அறியேன் யானே. | 296 |
விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை பூக்கொய் மகளிரின் தோன்றும் நாட பிரியினும் பிரிவ தன்றே நின்னொடு மேய மடந்தை நட்பே. | 297 |
மழைவரவு அறியா மஞ்ஞை ஆலும் அடுக்கல் நல்லூர் அசைநடைக் கொடிச்சி தான்எம் அருளாள் ஆயினும் யாம்தன் உள்ளுபு மற்ந்தறி யேமே. | 298 |
குனற நாடன் குன்றத்துக் கவாஅன் பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும் அம்சில் ஓதி அசைநடைக் கொடிச்சி கண்போல் மலர்தலும் அரிதுஇவள் தன்போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே. | 299 |
கொடிச்சி கூந்தல் போலத் தோகை அம்சிறை விவரிக்கும் பெருங்கல் வெற்பன் வந்தனன் எதிர்ந்தனர் கொடையே அம்தீம் கிளவி பொலிகநின் சிறப்பே. | 300 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 30. மஞ்ஞைப் பத்து., கொடிச்சி, இலக்கியங்கள், ஐங்குறுநூறு, மஞ்ஞைப், பத்து, தோகை, அசைநடைக், மஞ்ஞை, அடுக்கல், எட்டுத்தொகை, சங்க