ஐங்குறுநூறு - 29. கிள்ளைப் பத்து
சிறுதினை கொய்த இருவை வெண்கால் காய்த்த அவரைப் படுகிளி கடியும் யாண ராகிய நன்மலை நாடன் புகரின்று நயந்தனன் போலும் கவரும் தோழிஎன் மாமைக் கவினே. | 286 |
நெடுவரை மிசையது குறுங்கால் வருடை தினைபாய் கிள்ளை வெரூஉம் நாட வல்லை மன்ற பொய்த்தல் வல்லாய் மன்றநீ அல்லது செயலே. | 287 |
நன்றே செய்த உதவி நன்றுதெரிந்து யாம் எவன் செய்குவம் நெஞ்சே மெல்லியல் கொடிச்சி காப்பப் பல்குரல் ஏனல் பாத்தரும் கிளியே. | 288 |
கொடிச்சி இன்குரல் கிளிசெத் தடுக்கத்துப் பைங்குரல் ஏனல் படர்தரும் கிளியெனக் காவலும் கடியுநர் போல்வர் மால்வரை நாட வரைந்தனை கொண்மோ. | 289 |
அறம்புரி செங்கோல் மன்னனின் தாம்நனி சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய பூக்கமழ் கூந்தல் கொடிச்சி நோக்கவும் படும்அவள் ஒப்பவும் படுமே. | 290 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 29. கிள்ளைப் பத்து, இலக்கியங்கள், கிள்ளைப், கொடிச்சி, ஐங்குறுநூறு, பத்து, ஏனல், கிள்ளை, சங்க, எட்டுத்தொகை, போலும்