ஐங்குறுநூறு - 25. வெறிப்பத்து
வெறிசெறித் தனனே வேலன் கறிய கன்முகை வயப்புலி கலங்குமெய்ப் படூஉ புன்பலம் வித்திய புனவர் புணர்த்த மெய்ம்மை யன்ன பெண்பாற் புணர்ந்து மன்றில் பையுள் தீரும் குன்ற நாடன் உறீஇய நோயே. | 246 |
அன்னை தந்தது ஆகுவது அறிவன் பொன்னகர் வரைப்பின் கன்னம் தூக்கி முருகென மொழியும் ஆயின் அருவரை நாடன் பெயர்கொலோ அதுவே. | 247 |
பெய்ம் மணல் முற்றம் கவின்பெற இயற்றி மலைவான் கொண்ட சினைஇயf வேலன் கழங்கினால் அறிகுவது என்றால் நன்றால் அம்ம நின்றஇவள் நலனே. | 248 |
பெய்ம்மணல் வரைப்பின் கழங்குபடுத்து அன்னைக்கு முருகென மொழியும் வேலன் மற்றவன் வாழிய விலங்கு மருவிச் சூர்மலை நாடனை அறியா தோனே. | 249 |
பொய்படு அறியாக் கழங்கே மெய்யே மணிவரைக் கட்சி மடமயில் ஆலும்நம் மலர்ந்த வள்ளியம் கானம் கிழவோன் ஆண்டகை விறல்வேள் அல்லன்இவள் பூண்தாங்கு இளமுலை அணங்கியோனே. | 250 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 25. வெறிப்பத்து, இலக்கியங்கள், ஐங்குறுநூறு, வெறிப்பத்து, வேலன், முருகென, மொழியும், வரைப்பின், நாடன், எட்டுத்தொகை, சங்க