ஐங்குறுநூறு - 20. வளைப் பத்து.
கோடீர் எல்வளைக் கொழும்பல் கூந்தல் ஆய்தொடி மடவரல் வேண்டுதி யாயின் தென்கழி சேயிறாப் படூஉம் தன்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ. | 196 |
இலங்குவளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி முகம்புதை ச்துப்பினள் இறைஞ்ச்நின் றோனே புலம்புகொள் மாலை மறைய நலம்கேழ் ஆகம் நல்குவள் எனக்கே. | 197 |
வளையணி முன்கை வாலெயிற்று அமர்நகை இளையர் ஆடும் தளைஅவிழ் கானல் குறுந்துறை வினவி நின்ற நெடுந்தோள் அண்ணல் கண்டிக்கும் யாமே. | 198 |
கானலம் பெருந்துறைக் கலிதிரை திளைக்கும் வானுயர் நெடுமணல் ஏறி ஆனாது காண்கம் வம்மோ தோழி செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே | 199 |
இலங்குவீங்கு எல்வளை ஆய்நூதல் கவினப் பொலந்தேர்க் கொண்கன் வந்தனன் இனியே விலங்குஅரி நெடுங்கண் ஞெகிழ்மதி நலங்கவர் பசலையை நகுக நாமே. | 200 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 20. வளைப் பத்து., இலக்கியங்கள், வளைப், ஐங்குறுநூறு, பத்து, சங்க, எட்டுத்தொகை