ஐங்குறுநூறு - 2. வேழப்பத்து
மனைநடு வயலை வேழஞ் சுற்றும் துறைகேழ் ஊரன் கொடுமை நாணி நல்லன் என்றும் யாமே அல்லன் என்னுமென் தடமென் தோளே. | 11 |
கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும் துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும் ஆற்றுக தில்ல யாமே தோற்கதில்லஎன் தடமென் தோளே. | 12 |
பரியுடை நன்மான் பொங்குளை யன்ன வடகரை வேழம் வெண்பூப் பகரும் தண்துறை யூரண் பெண்டிர் துஞ்சூர் யாமத்துந் துயலறி யலரே | 13 |
கொடிப்பூ வேழம் தீண்டி அயல வடுக்கொண் மாஅத்து வண்தளிர் நுடங்கும் மணித்துறை வீரன் மார்பே பனித்துயில் செய்யும் இன்சா யற்றே. | 14 |
மண்லாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழைப் புனலாடு மகளிர்க்குப் புணர்துணை உதவும் வேழ மூதூர் ஊரன் ஊரன் ஆயினும் ஊரனல் லன்னே. | 15 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 2. வேழப்பத்து, இலக்கியங்கள், ஊரன், வேழப்பத்து, வேழம், ஐங்குறுநூறு, தடமென், தோளே, யாமே, துறைகேழ், எட்டுத்தொகை, சங்க, கொடுமை