ஐங்குறுநூறு - 19. நெய்தற் பத்து.
நாரை நல்லினம் கடுப்ப மகளிர் நீர்வார் கூந்தல் உளரும் துறைவ பொங்குழி நெய்தல் உறைப்ப இத்துறை பல்கால் வரூஉம் தேரெனச் செல்வா தீமோ என்றனள் யாயே. | 186 |
நொதும லாளர் கொள்ளார் இவையே எம்மொடு வந்து கடலாடு மகளிரும் நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார் உடலகம் கொள்வோர் இன்மையின் தொடலைக் குற்ற சிலபூ வினரே. | 187 |
இருங்கழிச் சேயிறா இனப்புன் ஆரும் கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை வைகறை மலரும்நெய்தல் போலத் தகைபெரி துடை காதலி கண்ணே. | 188 |
புன்னை நுன்தாது உறைத்தரு நெய்தல் பொன்படு மணியில் பொற்பத் தோன்றும் மெல்லம் புலம்பன் வந்தென நல்லன வாயின தோழியென் கண்ணே. | 189 |
தண்ணறு நெய்தல் தளையவிழ் வான்பூ வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும் மெல்லம் புலம்பன் மன்றஎம் பல்லிதழ் உண்கண் பனிசெய் தோனே. | 190 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 19. நெய்தற் பத்து., இலக்கியங்கள், நெய்தற், நெய்தல், ஐங்குறுநூறு, பத்து, புலம்பன், மெல்லம், சங்க, எட்டுத்தொகை, கண்ணே