ஐங்குறுநூறு - 17. சிறுவெண் காக்கைப் பத்து.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை வரிவெண் தாலி வலைசெத்து வெரூஉம் மெல்லம் புலம்பன் தேறி நல்ல வாயின நல்லோள் கண்ணே. | 166 |
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை இருங்கழி இனக்கெடிறு ஆரும் துறைவன் நல்குவன் போலக் கூறி நல்கான் ஆயினும் தொல்கே என்னே. | 167 |
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை துறைபடி யம்பி அகமனை ஈனும் தண்ணந் தூறைவன் நல்கி ஒள்நுதல் அரிவை பாலா ரும்மே. | 168 |
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை பொன்னிணார் ஞாழல் முனையில் பொதியவிழ் புன்னையம் பூஞ்சினைச் சேக்கும் துறைவன் நெஞ்சத்து உண்மை யறிந்தும் என்செயப் பசக்கும் தோழியென் கண்ணே. | 169 |
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை இருங்கழி நெய்தல் சிதைக்குந் துறைவன் நல்லன் என்றி யாயின் பல்லிதழ் உண்கண் பசத்தல்மற் றெவனோ. | 170 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 17. சிறுவெண் காக்கைப் பத்து. , சிறுவெண், பெருங்கடற், காக்கை, கரையது, இலக்கியங்கள், துறைவன், காக்கைப், பத்து, ஐங்குறுநூறு, எட்டுத்தொகை, இருங்கழி, கண்ணே, சங்க